
காதலை கற்று தந்தாய்....
கை பிடித்து வாழவும் கற்று தந்தாய் ...
தண்ணீரில் அழவும் கற்று தந்தாய்...
கண்ணீரோடு சிரிக்கவும் கற்று தந்தாய் ...
ஆனால்
எப்படி உன்னை நான் மறப்பதென்று
சொல்லாமல் சென்று விட்டாயே ??!!!!
நேசித்த நாட்களை நான்
கவிதைகளாக்கி வாசித்துப் பார்க்கிறேன் ......
கவிதைகள் மட்டுமல்ல - இனி என்
கண்ணீரும் எனை
உன்னோடு சேர்க்கப்போவதில்லை ...
என்னை நீ சந்திக்காமலேயே
இருந்திருக்கலாம் ...
இப்படி ஒருத்தி என் வாழ்வை
அழகாக்கி இன்று எனை
சிலையாக்கி சென்று விடுவாள்
என நான் சிந்திக்காமல் இருந்திருப்பேன் ...
நம் உறவுக்கு ஒரு அர்த்தம் உண்டென்றால்
நம் பிரிவுக்குள்ளும் ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கும்..
நினைத்து பார்க்க பல நூறு
நிகழ்வுகள் என்னுள் இருக்க
என் இதயம் நொறுங்கும்
நம் பிரிவை சொல்லும் அந்த
ஒரு நொடி எனக்கெதற்கு ...???!!!
என்றாவது ஒரு நாள் உன்னை
சந்திக்க நேர்ந்தால்
உன் கண்ணில் நம் நேசம்
காண வேண்டும் - இல்லையெனில்
அன்றே
என் சுவாசம் மறக்க வேண்டும் !!!!
