Sunday, May 23, 2010

உதிர்ந்த ரோஜா ...


காதலை கற்று தந்தாய்....
கை பிடித்து வாழவும் கற்று தந்தாய் ...
தண்ணீரில் அழவும் கற்று தந்தாய்...
கண்ணீரோடு சிரிக்கவும் கற்று தந்தாய் ...
ஆனால்
எப்படி உன்னை நான் மறப்பதென்று
சொல்லாமல் சென்று விட்டாயே ??!!!!



நேசித்த நாட்களை நான்
கவிதைகளாக்கி வாசித்துப் பார்க்கிறேன் ......

கவிதைகள் மட்டுமல்ல - இனி என்
கண்ணீரும் எனை
உன்னோடு சேர்க்கப்போவதில்லை ...

என்னை நீ சந்திக்காமலேயே
இருந்திருக்கலாம் ...
இப்படி ஒருத்தி என் வாழ்வை
அழகாக்கி இன்று எனை
சிலையாக்கி சென்று விடுவாள்
என நான் சிந்திக்காமல் இருந்திருப்பேன் ...

நம் உறவுக்கு ஒரு அர்த்தம் உண்டென்றால்
நம் பிரிவுக்குள்ளும் ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கும்..
நினைத்து பார்க்க பல நூறு
நிகழ்வுகள் என்னுள் இருக்க
என் இதயம் நொறுங்கும்
நம் பிரிவை சொல்லும் அந்த
ஒரு நொடி எனக்கெதற்கு ...???!!!

என்றாவது ஒரு நாள் உன்னை
சந்திக்க நேர்ந்தால்
உன் கண்ணில் நம் நேசம்
காண வேண்டும் - இல்லையெனில்
அன்றே
என் சுவாசம் மறக்க வேண்டும் !!!!

Monday, May 10, 2010

யுத்தமும் முத்தமும்


நாடுகளுக்கிடையே நடப்பது மட்டுமல்ல-சில நேரங்களில்
நம் உதடுகளுக்கிடையே நடப்பதும் யுத்தம் தான்.

கொடும் பாலைவனத்தில் அடிப்பது மட்டுமல்ல-இரவில்

நம் போர்வைக்குள் அடிப்பதும் வெயில் தான்.

கம்பிகளுக்கிடையே பாய்வது மட்டுமல்ல-எப்போதும்

உன் கண்களில் இருந்து பாய்வதும் மின்சாரம் தான்.


என் எல்லையற்ற சோகங்களுடன்
உன் மடியில் வந்து விழுகிறேன்-எழும் போது
பிறந்த குழந்தையாய் எழுகிறேன்.
கருவறையை மடியில் கொண்டவள்
நீ மட்டும் தான்.



என் நண்பன் கேட்டான்.
"உன்னவளை பற்றியே எப்போதும் எழுதுகிறாயே
அலுத்துப்போகவில்லையா உனக்கு" என்று.
நீ சுவாசித்து கொண்டே இருக்கிறாயே
உனக்கு அலுத்துவிட்டதா என்ன ?
என்றேன் நான்.



இது "விழா பேருந்து" என்றேன்
என் நண்பனிடம்
"இன்று எந்த விழாவும் இல்லையே".
என்றான் அப்பாவியாய்.
அவன் தலையில் தட்டி
"அதில் தான் என்னவள் போகிறாள்"
என்றேன் நான்


-------
நண்பன் அனுப்பியது ---------

காசில்லாத எளிய வைத்தியம்...

ஓவட் வெயிட் ஒபேஸிட்டி
டயட்டில் இருக்கிறேன்,
ட்ரெட் மில்லில் நடக்கிறேனென்று
அலட்டிக்கொள்ளுவதே
அன்றாட வழக்கமாச்சு...

மனசுக்குப் பிடித்ததைச்
சாப்பிடமுடியாமல்
மருத்துவரும் மருந்துமாகக்
கரைகிறது கைக்காசு...

உலகத்துத் தொலைக்காட்சி,
வீடெங்கும் வலைஆட்சி
சிறைப்பட்டுக் கிடக்கிறது
மனிதர்களின் உடலாட்சி...

அரைக்க தரைபெருக்க
துவைக்க துணிஉலர்த்த
துடைக்க சமைத்துவைக்க
சமைத்ததை சுத்தம்செய்ய,

அத்தனையும் செய்துவைக்கக்
கருவிகள் வந்திறங்க,
ஏறித்தான் போனது
எடையும் இயலாமையும்...

கால்விரலைப் பார்க்கவே
கஷ்டப் படும்படிக்கு
மேலெழுந்து நிற்கிற
மத்தள வயிற்றினால்,

இல்லாத நோயெல்லாம்
சொல்லாமல் வந்துவிட,
கொல்லாமல் கொல்லுகிறது
வல்லிய வேதனைகள்...

வேதனையைக் குறைக்க
விரதத்தைக் கடைப்பிடித்து,
சோதனை முயற்சியினால்
சுகமிழந்து போகாமல்,

உடலைக் குறைக்கின்ற
அவசியம் வந்துவிட்டால்,
வேலையைக்கூட்டிக் கொஞ்சம்
விளையாட்டைப் பெருக்கிவிட்டால்
உடல்சுமை கழிந்துவிடும்

இதுவே,
காசில்லாத எளிய வைத்தியம்