சிறகுகள் இல்லாத தேவதை நீயா?இல்லை,
சிறகுகள் கொண்டால் நீ தான் தேவதையா?
இரண்டுமே உனக்கு பொருந்தும் பெண்ணே ...
நாம் கொண்டது அன்பான நட்பா...
இல்லை ஆத்மார்த்த காதலா...
இரண்டும் கடந்து வேறேதும்
உன்னதமான ஒரு உணர்வா? !!!
எண் ஆசை சிறிது தான் ...
ஒரு நாள் முழுதும்
உன்னோடு வாழவேண்டும்
அதுவே எண்ஆயுள் காலமாய்
ஆக வேண்டும்...

இரவெல்லாம் உன்னோடு
பேசும் வரம் கிடைத்திருப்பின்...
எண் வாழ்வே இருளில்
கழிந்தாலும் கவலை மறந்திருப்பேன்...காலம் என்பது கடலானால்
ஒவ்வொரு துளியும் உன்னோடு கழித்திடுவேன்...
காலம் என்பது துளியானால்
ஒவ்வொரு கடலையும் உன்னக்காக கழித்திடுவேன்...
கண்ணுக்குள் நீ இருப்பதால்
கருவிழி இருள் அகற்றவே
நான் இரவில் கூட
கண்விளித்திருக்கிறேன் ...
இதயத்தில் நீ இருப்பதால்,
அது இதமாக துடிக்கிறது...
அதுவும் நின்றால் கூட கவலை இல்லை..
நீ அமைதியை வாசம் கொள் கண்ணே...
உனைவிட சிறந்த நேசம் கொண்டதில்லை..
தாயிடம் கூட உன் பாசம் கண்டதில்லை...
அன்பாய் அரவணைத்தாய்..
ஆசையாய் பேசி வந்தாய்...
இனிமையாய் பழகி வந்தாய்..
இது போல் ஒரு சொந்தம்இனிவரும் ஜென்மத்திலும்
காணப்போவதில்லை நான்...
கடவுள் ஏன் உலக சந்தோசங்கள்
அனைத்தையும் உன்னுருவில் காட்டினான்?
கண்ணீரோடு கழியும் எண் இரவுகளில்
கல்லறையின் சோகத்தில் வாட்டினான்...
நீ இல்லாத நேரங்களில் அழுகிறேன் நான்...
ஒவ்வொரு துளி கண்ணீரும்
உனைத்தான் தேடி வருகின்றன...
உன் பிரிவு என்னை காயப்படுத்துகிறது...
எல்லா நேரங்களிலும் அல்ல,
நான் சுவாசிக்கும் போது மட்டும்...
அடுத்தொரு ஜென்மம் உண்டென்றால்...
உன் தாயாக நான் வேண்டும்...
இம்மையில் பெற்ற கடனில்
சிறு கவலமாவது நான்
திருப்பி தர வேண்டும்...
எண் இதயத்தின் பிரார்த்தனை:இறைவா! எண் வாழ்வின் ஒவ்வொரு
சுவாசம் எடுத்துக்கொண்டு ...
அவளை நீ ஆசிர்வாதமாய் வாழ வை..
எண் ஆன்மாவின் பிரார்த்தனை:
இறைவா! இனிவரும் எண் ஜென்மத்தின்
சுவாசம் எடுத்துக்கொண்டு...
அவளை நீ ஆசிர்வதமே வாழ்வை..
எங்கும் தேடாமல்
எனக்கு கிடைத்த வரம் நீ..
எங்கேயோ தொலைத்து விட்டு
இரவெல்லாம் புலம்பும் ஸ்வரம் நான்...