
ஊருக்கே தெரிந்த கதை, அதை முக்கிய கதாபாத்திரங்களால் இன்றைய காலத்திற்கேற்ப யாரும் இதுவரை அணுகாத வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் மணிரத்னம்.
முதல்பாதி நேரம்போனதே தெரியவில்லை, இரண்டாவதுபாதி முன்பாதியை போல வேகம் அதிகமில்லாவிட்டாலும் எந்த இடத்திலும் அலுப்பை தரவில்லை. பாமரனுக்கும் புரியக்கூடியவாறு திரைக்கதையை அமைத்துள்ளார். அத்தனை காட்சிகளிலும் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர்! தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு அருமை. மலைகள், அருவிகள், காட்டு வழிகள், அந்த எரியும் பாலம், ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் அருவியில் விழும் காட்சி என அனைத்தையுமே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பார்க்கும் நமக்கே ஜில்லிடும் அளவு தத்ரூபமான ஒளிப்பதிவு.
விக்ரம் நடிப்பில் அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்துள்ளார். கோபம், அமைதி, சிரிப்பு, தவிப்பு, தாபம், வெறி, சோகம் என நடிப்பின் அத்தனை பரிமாணத்திலும் கலக்குகிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு என்பனவற்றில் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் ராவணனையும் ராவணனிலும் விட்டு வைக்கவில்லை, அதிகமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் சர்வசாதாரணமாக சாகசம் புரிந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய்க்கு அழகு குறையவே குறையாது போலிருக்கிறது. அப்படியே அதே 50Kg தாஜ்மஹாலாகவே இருக்கிறார். விக்ரமுக்கு பயப்படாமல் எதிர்த்து நிற்கும் ஐஸ்வர்யா, விக்ரமின் பேச்சில் சலனம் ஏற்பட்டு அதற்கு அவர் கொடுக்கும் முகபாவனை பிரமாதம். அதே சமயம் மலை ஏறுவது, விக்ரமை தாக்குவது என படத்தின் மற்றொரு கதாநாயகன் போலவே வலம் வருகிறார். மணிரத்னம் படங்களில் நடிப்பதாலோ என்னவோ தெரியவில்லை இன்றைய நடிகைகள் அனைவரையும்விட ஐஸ் அழகையும் தாண்டி சிறப்பானவாராக தெரிகிறார்.
முதல்பாதி நேரம்போனதே தெரியவில்லை, இரண்டாவதுபாதி முன்பாதியை போல வேகம் அதிகமில்லாவிட்டாலும் எந்த இடத்திலும் அலுப்பை தரவில்லை. பாமரனுக்கும் புரியக்கூடியவாறு திரைக்கதையை அமைத்துள்ளார். அத்தனை காட்சிகளிலும் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர்! தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு அருமை. மலைகள், அருவிகள், காட்டு வழிகள், அந்த எரியும் பாலம், ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் அருவியில் விழும் காட்சி என அனைத்தையுமே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பார்க்கும் நமக்கே ஜில்லிடும் அளவு தத்ரூபமான ஒளிப்பதிவு.
விக்ரம் நடிப்பில் அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்துள்ளார். கோபம், அமைதி, சிரிப்பு, தவிப்பு, தாபம், வெறி, சோகம் என நடிப்பின் அத்தனை பரிமாணத்திலும் கலக்குகிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு என்பனவற்றில் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் ராவணனையும் ராவணனிலும் விட்டு வைக்கவில்லை, அதிகமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் சர்வசாதாரணமாக சாகசம் புரிந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய்க்கு அழகு குறையவே குறையாது போலிருக்கிறது. அப்படியே அதே 50Kg தாஜ்மஹாலாகவே இருக்கிறார். விக்ரமுக்கு பயப்படாமல் எதிர்த்து நிற்கும் ஐஸ்வர்யா, விக்ரமின் பேச்சில் சலனம் ஏற்பட்டு அதற்கு அவர் கொடுக்கும் முகபாவனை பிரமாதம். அதே சமயம் மலை ஏறுவது, விக்ரமை தாக்குவது என படத்தின் மற்றொரு கதாநாயகன் போலவே வலம் வருகிறார். மணிரத்னம் படங்களில் நடிப்பதாலோ என்னவோ தெரியவில்லை இன்றைய நடிகைகள் அனைவரையும்விட ஐஸ் அழகையும் தாண்டி சிறப்பானவாராக தெரிகிறார்.
காதல் காட்சிகளில் 'அலைபாயுதே' மனம்; சண்டைக்காட்சிகளில் 'அக்னி நட்சத்திரம்'; இசையில் 'மௌன ராகம்'; கதையில் 'பகல் நிலவு'; உலக தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் 'தளபதி'; பிரம்மாண்டத்தை பார்த்தால் 'உயிரே' உருகுது; திரைக்கதை அமைப்பில் 'பம்பாய்' தாக்கம்; இயக்கத்தில் 'நாயகன்'; இனி சினிமாவுக்கு ஆயுத எழுத்து. மொத்தத்தில் கொடுக்கலாம் ஒரு 'ரோஜா' பூச்செண்டு வாழ்த்த.., வழியனுப்ப..; ரெஸ்ட் எடுங்க 'குரு'!
ராவணன் - காதல் வன வாசம்
பாடல் வரிகளில் கவிஞர்
ராமன் கலந்த ராவண காதலை
கவிதையோடு
இலைமறை காயாக சொல்லி இருக்கிறார் ...
'உசுரே போகுதே ' பாடலில் நம்மை உருக வைக்கிறார் ....
உசுரே போகுதே
உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே
ஓ மாமன் தவிக்கிறேன்
மடிப்பிச்சை கேக்கறேன்
மனச தாடி என் மணிக்குயிலே
...
...
அக்கறைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
....
...
ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேட்கல
...
...
என் மயக்கத்த தீத்துவச்சு மன்னிச்சுடும்மா
...
எட்ட இருக்கும் சூரியனை பார்த்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல
...
...
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல ஒன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள
..........
No comments:
Post a Comment