Thursday, April 22, 2010

TEAM = Together Everyone Achieve More





This is the real meaning of team work

ஏன் இந்த பிரிவு ....


நமக்குள் என்றும்
பிரிவுகள் இல்லை
என்றுதானே
நொடிக்கொருமுறை
சொல்லிக் கொண்டிருந்தாய்

இன்று ஏன் ? எப்படி?
யார் சொல்லி?
எனை பிரிந்து சென்றாய்

நமக்குள் ஏன்
இப்படி ஒரு பிரிவு?

என் மனதை
புரிந்து கொள்ள
முயற்சிக்காமலே
என்னை பிரிந்து சென்றாயே!!!

உன் பிரிவை
நினைக்கும் போதெல்லாம்
உயிர் போகும் வலியையே
உணர்கிறேன்

நம் நினைவுகள் அழகானவை
நம் பேச்சுகள் சுகமானவை
நம் நட்பு இன்பம் தருபவை என
உன்னால் என் இதயத்தில்
பதிய செய்துவிட்டு

இன்று இவை ஏதும்
உனக்கில்லை என்று சொல்லி
வேண்டுமென்றால்
என் பிரிவை வைத்துக்கொள்
என்று பரிசளித்து
சென்று விட்டாயே!!!

நீ தந்த உன் நினைவுகள்
இன்றும் என்னுள்
அப்படியே இருக்கிறது

இந்த பிரிவு என்பது
உனக்கு மட்டும்தான்
என்னுள் என்றும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
உனக்கு அல்ல!!!

எல்லோருக்கும்
எல்லோரும் இருக்கிறார்கள்
எனக்கு மட்டும் ஏன்
நீ இல்லாமல் இருக்கிறாய்?

Tuesday, April 20, 2010

கவிதைக் கொத்து......

விலைவாசி ஏற்றம்
குருவியையும் விட்டுவைக்கவில்லையோ....
சின்னதாய் கட்டியது கூடு

இவன் பசுவின் பாலைக் கறந்தால்
" பசு பால் தரும்" என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
"காகம் வடையைத் திருடிற்று''
இப்படியாக மனிதன்.


சிலருக்கு பனி துளி புடிக்கும்,
சிலருக்கு மழை துளி புடிக்கும்
ஆனால், யாரையாவது உண்மையாக 'நேசித்து' பாருங்கள்..
கண்ணீர் துளி கூட பிடிக்கும்

நிலவு இருக்கும் தூரத்தை விட
நீ எண் எதிரில் இருக்கும் தூரம் குறைவுதான்
அனால் நிலவை காண முடிந்த என்னால்
உன்னை காண முடியவில்லையே...

அழகுதான் ,
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி இருந்த
அவள் பாத சுவடுகள்.


தேடிக்கொண்டிருக்கிறேன்..!!
தேடிக்கொண்டிருக்கிறேன்..!
நான் காணும் ஆயிரம் ஆயிரம் முகங்களில்..!!
இன்னும் அறிமுகமாகாத
என்னவளின் முகத்தை...!!!



விபத்து பகுதி
" வேகமாக" செல்லவும்
" மகளிர் கல்லூரி "


நீ பறிக்க வருவாய் என்று
முள்ளில்லாமல் பூத்தது
ரோஜாப்பூ..

வெற்றி’யை விரும்பும் நமக்கு
தோல்வி’யை தாங்கும் மனம் இல்லை…!
தோல்வி’யை தாங்கும் மனம் இருந்தால் அதுவும்
ஒரு வெற்றி’ தான்.!