Tuesday, April 20, 2010

கவிதைக் கொத்து......

விலைவாசி ஏற்றம்
குருவியையும் விட்டுவைக்கவில்லையோ....
சின்னதாய் கட்டியது கூடு

இவன் பசுவின் பாலைக் கறந்தால்
" பசு பால் தரும்" என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
"காகம் வடையைத் திருடிற்று''
இப்படியாக மனிதன்.


சிலருக்கு பனி துளி புடிக்கும்,
சிலருக்கு மழை துளி புடிக்கும்
ஆனால், யாரையாவது உண்மையாக 'நேசித்து' பாருங்கள்..
கண்ணீர் துளி கூட பிடிக்கும்

நிலவு இருக்கும் தூரத்தை விட
நீ எண் எதிரில் இருக்கும் தூரம் குறைவுதான்
அனால் நிலவை காண முடிந்த என்னால்
உன்னை காண முடியவில்லையே...

அழகுதான் ,
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி இருந்த
அவள் பாத சுவடுகள்.


தேடிக்கொண்டிருக்கிறேன்..!!
தேடிக்கொண்டிருக்கிறேன்..!
நான் காணும் ஆயிரம் ஆயிரம் முகங்களில்..!!
இன்னும் அறிமுகமாகாத
என்னவளின் முகத்தை...!!!



விபத்து பகுதி
" வேகமாக" செல்லவும்
" மகளிர் கல்லூரி "


நீ பறிக்க வருவாய் என்று
முள்ளில்லாமல் பூத்தது
ரோஜாப்பூ..

வெற்றி’யை விரும்பும் நமக்கு
தோல்வி’யை தாங்கும் மனம் இல்லை…!
தோல்வி’யை தாங்கும் மனம் இருந்தால் அதுவும்
ஒரு வெற்றி’ தான்.!

No comments:

Post a Comment