பார்ப்பனீய வேதாளம் வர்ண விக்ரமாதித்தன் தலையில்
நிரந்தரமாய் அமர்ந்து கொண்டிருக்கும் ...
சாலை கற்களெல்லாம் சாமிகளாகி
வாழ்க்கை போக்குவரத்தை விபத்துக்குள்ளாக்கும்...
பொறுக்கிக்கும் விலை மாதிற்க்கும் பிறந்தவர்கள்
மலத்திற்கிணையாய் மனிதனை மதித்திருப்பார்கள்...
IIT IIM ல் மட்டுமல்ல
எங்கும் இட ஒதுக்கீடு எட்டாக் கனியாயிருக்கும் ...
திருமணம் என்ற பெயரில்
பெண் வீட்டாரின் இரத்தம் உறிஞ்சப்பட
சுய மரியாதை இணைகள் கனவாயிருக்கும் ...
கற்பெனும் பெயரில் தோழிகள் வாழ்க்கை
கல்வி , கேள்வி ,கனவுகளின்றி
சமையலறைக்கும் படுக்கையறைக்குமிடையே
நடைபிணமாய் உறைந்திருக்கும் ...
விதி ,விதவை என்ற பெயர்களில்
விரும்பா வாழ்க்கை ரணமாய் வலிக்கும் ...
எழுத்து சீர்திருத்தங்களின்றி
சீக்காளியாய் தமிழ் சிதைந்திருக்கும் ...
சமஸ்கிருதமும் இந்தியும் விழிகளாக
குடல் வாலாய் தமிழ் குன்றிப் போயிருக்கும்
தமிழில் எழுதுவது போய்
பாலர் வகுப்பே இந்தியில் தாம் நடைபெறும்
தேசம் தேசியம் என்ற போர்வைகளில்
இன உணர்வற்ற தமிழன் தும்முவதற்க்கும்
காவடி எடுத்துக் கொண்டிருப்பான் தில்லிக்கு ...
பொதுமை கூடங்கள் சாத்திய மற்று
பட்டினி சாவுகள் தமிழகத்தை அலங்கரிக்கும் ...
கிராமத்தில் கள்ளுக் கடை போய்
கள்ளுக் கடையில் கிராமம் இருக்கும் ...
ராகுவும் கேதுவும் எமகண்டமும்
நிகழ் காலத்தை உதிர்கால மாக்கும் ...
மொத்தத்தில் தோழர் பிறந்திராவிடில்
94 வருடங்கள் தமிழன் பின் தங்கியிருப்பான் ...
-----நன்றி : இராசா ராம் -------
நிரந்தரமாய் அமர்ந்து கொண்டிருக்கும் ...
சாலை கற்களெல்லாம் சாமிகளாகி
வாழ்க்கை போக்குவரத்தை விபத்துக்குள்ளாக்கும்...
பொறுக்கிக்கும் விலை மாதிற்க்கும் பிறந்தவர்கள்
மலத்திற்கிணையாய் மனிதனை மதித்திருப்பார்கள்...
IIT IIM ல் மட்டுமல்ல
எங்கும் இட ஒதுக்கீடு எட்டாக் கனியாயிருக்கும் ...
திருமணம் என்ற பெயரில்
பெண் வீட்டாரின் இரத்தம் உறிஞ்சப்பட
சுய மரியாதை இணைகள் கனவாயிருக்கும் ...
கற்பெனும் பெயரில் தோழிகள் வாழ்க்கை
கல்வி , கேள்வி ,கனவுகளின்றி
சமையலறைக்கும் படுக்கையறைக்குமிடையே
நடைபிணமாய் உறைந்திருக்கும் ...
விதி ,விதவை என்ற பெயர்களில்
விரும்பா வாழ்க்கை ரணமாய் வலிக்கும் ...
எழுத்து சீர்திருத்தங்களின்றி
சீக்காளியாய் தமிழ் சிதைந்திருக்கும் ...
சமஸ்கிருதமும் இந்தியும் விழிகளாக
குடல் வாலாய் தமிழ் குன்றிப் போயிருக்கும்
தமிழில் எழுதுவது போய்
பாலர் வகுப்பே இந்தியில் தாம் நடைபெறும்
தேசம் தேசியம் என்ற போர்வைகளில்
இன உணர்வற்ற தமிழன் தும்முவதற்க்கும்
காவடி எடுத்துக் கொண்டிருப்பான் தில்லிக்கு ...
பொதுமை கூடங்கள் சாத்திய மற்று
பட்டினி சாவுகள் தமிழகத்தை அலங்கரிக்கும் ...
கிராமத்தில் கள்ளுக் கடை போய்
கள்ளுக் கடையில் கிராமம் இருக்கும் ...
ராகுவும் கேதுவும் எமகண்டமும்
நிகழ் காலத்தை உதிர்கால மாக்கும் ...
மொத்தத்தில் தோழர் பிறந்திராவிடில்
94 வருடங்கள் தமிழன் பின் தங்கியிருப்பான் ...
-----நன்றி : இராசா ராம் -------






