Tuesday, July 12, 2011

புரியாத புதிர் ....

மௌனத்தால்
யுத்தம் செய்கிறாள்
அவள் ...
என்று பேசுவாள்
என மண்டியிட்டு
தவமிருக்கிறான்
அவன்...
கேள்விக்கனையால்
துளைத்தேடுக்கிறாள்
இவள் ...
எப்போதும் போல்
எதிரில் நிற்ப்பதை
தவிர்க்கிறான்
இவன் ...
அவன் நிறைய பேசுவான் ....
அவள் அமைதியாய் கவனிப்பாள்...
ஏக்கத்தோடு
"ஏதாவது பேசு..." என்பான் ...


இவள் நிறையவே பேசுகிறாள்
கேட்கத்தான் இவனுக்கு பொறுமை இல்லை .
"கொஞ்சம் நிறுத்துறியா ..."என்கிறான்
கோபத்தோடு .
ஏகப்பட்ட கேள்விகள் வரும்...
மௌனமாய் இருப்பான்...

எதிர்த்து பேசினால்
எப்போதுமே கண்ணீர் வரும் .
அவள் சிணுங்குவாள் ...

இவள் சீறுவாள் .....


பெண்களின் பலம்
கண்ணீர் ...
ஆண்களின் பலவீனமும்
அதுதான் .


இவன் நினைக்கிறான்
இவள் அவளாகவே இருந்திருக்கலாம் ...
இவள் நினைக்கிறாள்
இவன் அவனாகவே இருந்திருக்கலாம் ...

இரண்டும் தவறில்லை
அவன் என்பவன் காதலன் ..
இவன் என்பவன் கணவன் ..

அவள் என்பவள் காதலி
இவள் என்பவள் மனைவி...

எல்லாம் ஒன்று தான்
எதிபார்ப்புகள் சிதறுவதாலும்
எண்ணங்கள் சுருங்குவதாலும்
வருகின்ற உணர்வே
இதற்க்கெல்லாம் காரணம் ...


பேசியே கொல்வதும்...
பேசாமல் கொல்வதும் ...
பெண்களால் மட்டுமே முடியும்.

No comments:

Post a Comment