
நமக்குள் என்றும்
பிரிவுகள் இல்லை
என்றுதானே
நொடிக்கொருமுறை
சொல்லிக் கொண்டிருந்தாய்
இன்று ஏன் ? எப்படி?
யார் சொல்லி?
எனை பிரிந்து சென்றாய்
நமக்குள் ஏன்
இப்படி ஒரு பிரிவு?
என் மனதை
புரிந்து கொள்ள
முயற்சிக்காமலே
என்னை பிரிந்து சென்றாயே!!!
உன் பிரிவை
நினைக்கும் போதெல்லாம்
உயிர் போகும் வலியையே
உணர்கிறேன்
நம் நினைவுகள் அழகானவை
நம் பேச்சுகள் சுகமானவை
நம் நட்பு இன்பம் தருபவை என
உன்னால் என் இதயத்தில்
பதிய செய்துவிட்டு
இன்று இவை ஏதும்
உனக்கில்லை என்று சொல்லி
வேண்டுமென்றால்
என் பிரிவை வைத்துக்கொள்
என்று பரிசளித்து
உனக்கில்லை என்று சொல்லி
வேண்டுமென்றால்
என் பிரிவை வைத்துக்கொள்
என்று பரிசளித்து
சென்று விட்டாயே!!!
நீ தந்த உன் நினைவுகள்
இன்றும் என்னுள்
அப்படியே இருக்கிறது
இந்த பிரிவு என்பது
உனக்கு மட்டும்தான்
என்னுள் என்றும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
உனக்கு அல்ல!!!
எல்லோருக்கும்
எல்லோரும் இருக்கிறார்கள்
எனக்கு மட்டும் ஏன்
நீ இல்லாமல் இருக்கிறாய்?
No comments:
Post a Comment