Tuesday, September 14, 2010

அப்பாவின் பாசம்!

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா !
ஒரேயொரு
கை அழுத்தத்தில்
உணர்த்துவார் அப்பா !

முன்னால் சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப் பற்றி
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை ...
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உரைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது ...

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என நண்பர்கள்
என்னிடம் சொல்லும்
போது தான்
எனக்கு தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என ...

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை
அனுப்பி இருக்கிறாரோ
கடவுள்..?
சிறு வயதில்
கைபிடித்து நடை பயில
சொல்லிக் கொடுத்த அப்பா
எண்s கரம் பிடித்து நடந்த போது
என்ன நினைத்திருப்பார் ..?
லேசாக எண் கால்
தடுமாறினாலும்
பதறுவார் அப்பா
இன்று அவர்
தடுமாறிய போது
அருகில் இல்லை நான் ...
அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாக சொல்லி
இருக்கிறேன்
அம்மா
அப்பா செல்லம் என ...
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..

அம்மாவிடம் பாசத்தையும்

அப்பாவிடம் நேசத்தையும்

இன்றே உணர்த்துங்கள்

1 comment: