Saturday, April 9, 2011

ஏப்ரல் மாதம்...


ஏப்ரல் மாதம்...

பள்ளியானாலும் ...
கல்லூரியானாலும் ...
நட்போடு இணைந்திருப்பவர்கள்
கண்ணீரோடு விடைபெறும் மாதம் இது .

காதலில் இணைந்தவர்களுக்கும்
காலத்தால் பிரிந்தவர்களுக்கும்

மலரும் நினைவுகள் மனதில்
துளிர்விடும் மாதம் ....

எல்லோருக்கும்
எப்போதாவது
எதோ ஒரு பிரிவை
எண்ணத்தில் கொண்டு வரும் மாதம்

ஏப்ரல் மாதம் ...

இணைந்தவர்கள் பிரிவதும்
பிரிந்தவர்கள் இணைவதும்
இந்த மாதத்தின்

எழுதப்படாத நிகழ்வுகள் ..

தொடர்கதையாய் நீளும்

வாழ்நாளில்

சிறுகதையாய் ஒரு

வசந்த காலம் ...
எல்லோருக்கும் உண்டு .


விதி வழி வந்து

விழி
வழி கலந்து

கிளி மொழி
பேசும் - வெண்
மதியவள் நேசம்
கிடைத்ததும் இம்மாசம் ...



எப்போதும் என்மனவானில்
என்னோடு சிறகடிக்கும்
உன் நட்பான நினைவுகளுடன் ...

வாழ்த்துகிறேன்

உன் வளமான வாழ்விற்காய் ...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

No comments:

Post a Comment