செந்தமிழ் நாடிது
எந்தமிழ் நாடென்று
ஏட்டினில் எழுதுகையில்
இனிக்குதடா செந்தமிழா!.
எந்தமிழ் நாடிதனில்
எனக்கில்லா சுதந்திரத்தை
எண்ணிப் பார்க்கையிலே
எரியுதடா என் நெஞ்சு!
சுதந்திரமும் குடியரசும்
சுட்டெரிந்து போனதனால்
சுடரில்ல விளக்குகளால்
இருண்டதடா தமிழகமே!
பிறப்புச் சான்று முதல் நம்
இறப்புச் சான்று வரை
இலவசமாய்ப் பெற்றிடவே
இல்லாத நிலைமையடா!
அரசியலாரும் மெத்த
அதிகாரியாரும் மக்கள்
பணியாளர்களென்றே என்
பள்ளியிலே சொன்னதுண்டு!
எஜமானர் தானிங்கு
எடுபிடிகளாகி விட்ட
எழுதவொண்ணா நிலையிதனை
எடுத்துச் சொல்வார் யாரோ?
ஆகஸ்டு சுதந்திரத்தை
அநியாயமாய்த் தொலைத்துவிட்ட
அடிமைத் தமிழனே.... உன்னை
அறிந்துகொள் தமிழனே....
உண்மை
தெரிந்துகொள் தமிழனே...
மேடைபோட்டு உனக்குப்
பாடைகட்டுவோரின் சொல்
வேதமென்று துடித்திடும் நீ - அறியாது
வேதனையில் துடித்திடுவாய்!
உணர்ந்துகொள் தமிழா
உனக்கு எல்லாவிடத்தும் உரிமை உண்டென்று!
தெரிந்துகொள் தமிழா இத்
தேசமே உனதென்று!
செந்தமிழ் நாடிதனை
எந்தமிழ் நாடென்றிட
புறப்பட்டு வாராயோ!!
புதுப் புரட்சியைத் தாராயோ!!!
---------------------யாரோ ஒரு உண்மை தமிழன் ....
Thursday, July 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
hi john,
ReplyDeletewelcome to the blog world .....
nice to see the posts ....
expecting more of ur imaginations and experiences... :) keep blogging ....
nice name : nilavemalare : (typical john's touch with lyrics name )
could remember ur imaginative love letterwith all popular cine lyrics sentences during college days ;)